*Sathiyam tv new program Makkal manasu*

“மக்கள் மனசு”

சத்தியம் தொலைக்காட்சியில் மக்களின் மனதில் உள்ள எதிர்பார்ப்புகள், தேவைகள் என்று மக்களின் குரலாய் ஒலிக்கிறது ‘மக்கள் மனசு’.

மக்கள் மனதில் எழும் கேள்விகளை மக்கள் மன்றத்தில்  பிரதிபலிக்கிறது. இந்த நிகழ்ச்சியில், ஒவ்வொரு நாளும் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு, துறை சார்ந்த நிபுணர்கள், ஆலோசனைகளையும் தீர்வுகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்குகின்றனர். அத்துடன், மக்கள் மனசு நிகழ்ச்சியின் வாயிலாக மக்களுக்கு முழுமையான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது.

வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளிகிழமை  பிற்பகல் 3:00 மணிக்கு இந்த நிகழ்ச்சி சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் நெறியாளர் கோபாலகிருஷ்ணன். மேலும் இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக சுந்தர் செயல்படுகிறார்.