*Pudhuyugam Tv new program En puththaga araiyil

என் புத்தக அறையில்

புதுயுகம் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் காலை 9:00 மணிக்கு  “என் புத்தக அறையில்” என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. படிக்கப் படிக்க பரவசப்படும் பிரபலங்களின் வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சியாக உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கவிஞர்கள் எழுத்தாளர்கள் பேச்சாளர்கள் திரைப்பட இயக்குனர்கள் அரசியல் பிரமுகர்கள் என பலத்துறை வல்லுனர்களும் கலந்துகொண்டு அவர்களது வாசிப்பு அனுபவம், தேடிப் படித்தது, பிடித்த எழுத்தாளர்கள், பிடித்த புத்தகங்கள், திரும்பத் திரும்ப படித்தவை, இப்படி படிக்கத் தூண்டும் விதமாக அவர்களை தூண்டியது எது??? என அனைத்து வினாக்களுக்கும் பதில் அளிக்கும் ஒரு நிகழ்ச்சியாக உள்ளது. அந்த வரிசையில் தனிப்பட்ட முறையில் பல நூலகங்கள் மற்றும் முப்பதாயிரத்துக்கு மேற்பட்ட நூல்கள் வைத்திருக்கும் சென்னை பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் வீ .அரசு இந்நிகழ்ச்சியில் பங்கு பெரும் அவர்கள் தனது புத்தக வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்..