இலெமூரியா திரைப்பட துவக்க விழா

இலெமூரியா திரைப்படத்தின் துவக்க விழா திருச்செந்தூர் அருகே உள்ள உவரியில் ஸ்ரீ சுயம்புலிங்கம் திருத்தலத்தில் (முதல் தமிழ் சங்கம் ) 27.10.21அன்று காலை 9 மணிக்கு பூஜையுடன் தொடங்கியது.  

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு  அமைச்சர் மனோ தங்கராஜ் (தமிழ்நாடு தொழில் நூட்பத்துறை ),மாண்புமிகு நீதியரசர் டாக்டர் பி.ஜோதிமணி (தலைமை கண்காணிப்பு குழு ஆணையம் ,தமிழ்நாடு )சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் .இப்படத்தின் இயக்குனர் தயாரிப்பாளர் டாக்டர் த.இரவீந்திரா( இலெமூரியா உலகத்தமிழ் ஆய்வு மையம் ) தலைமை தாங்கினார் . ஜோதிடர் நெல்லை வசந்தன் ,சர்வதேச விளையாட்டு வீரர் சமூக சிந்தனையாளர் டாக்டர் .மா ரா .சௌந்தரராஜன் வரவேற்புரை ஆற்றினார் .இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படுகிறது .தமிழர்கள் உள்ள 186 நாடுகளிலும் இப்படம் ரிலீஸ் செய்யப்படுகிறது

.