Kalaignar TV Ponni C.O Rani

ராஜாராமின் பிடிவாதம், பொன்னி எடுக்கப்போகும் முடிவு என்ன..?

கலைஞர் தொலைக்காட்சியில் இரவு 8:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மெகாத்தொடர் “பொன்னி C/O ராணி”. பிரீத்தி சஞ்ஜீவ், ராதிகா சரத்குமார் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் இந்த நெடுந்தொடருக்கு குடும்பங்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

தொடரில் தன் மகனின் திருமணத்தை நிறுத்த முயற்சி செய்யும் பொன்னியின் இக்கட்டான சூழல் இந்த வாரத்தில் வருவதால், தொடர் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.

பொன்னியின் மூத்த மகனால் கர்ப்பமாக்கப்படும் பவித்ரா, பொன்னி வீட்டில் தஞ்சமடைய, சூர்யாவுக்கு வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. பவித்ராவின் கர்ப்பத்திற்கு தன் மகன் சூர்யா தான் காரணம் என தெரிந்து கொள்ளும் பொன்னி, இந்த கல்யாணத்தை நிறுத்த முயற்சி செய்கிறார். ஆனால், பொன்னியின் கணவர் சூர்யா கல்யாணத்தை நடத்துவதில் பிடிவாதமாக இருக்க, கல்யாண விஷயத்தில் ஒர் இறுதி முடிவு எடுக்க குலதெய்வ கோயிலுக்கு செல்கின்றனர்.

அங்கு நடக்கப்போவது என்ன? கல்யாணத்தை நிறுத்த நினைக்கும் பொன்னியின் எண்ணம் நிறைவேறுமா? இந்த கல்யாண விஷயத்தில் அடுத்து வரப்போகும் சிக்கல் என்ன? என்பது வரும் வாரங்களில் தெரிய வரும் என்பதால் தொடர் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.