“இடம் பொருள் ஏவல்” திரைப்படத்தின் சிறப்பு காட்சி

திரைப்பட இயக்குநர் நண்பர் திரு சீனு ராமசாமி அவர்கள் அழைப்பின் பேரில் இன்று “இடம் பொருள் ஏவல்” திரைப்படத்தின் சிறப்பு காட்சியை கண்டேன். கவிப்பேரரசு வைரமுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்(மார்க்சிஸ்ட்) மாநில செயலாளர் திரு கே. பாலகிருஷ்ணன் மற்றும் எழுத்தாளர் திரு எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

விஜய் சேதுபதி நடித்துள்ள இத்திரைப்படம் லிங்குசாமி அவர்கள் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இயற்கை வளங்களையும் மற்றும் சுற்றுசூழலையும் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை ஆங்காங்கே இப்படம் சுட்டிக்காட்டுகிறது.

கல்லுக்குள் ஈரம் உண்டு என்று சொல்வார்கள்,
கல்நெஞ்சமும் கரையும் என்று சொல்வார்கள்,
கொலை செய்யும் கொலைகாரனுக்கும் ஒரு இதயம் உண்டு என்று சொல்கிறது இந்த படம்.

ஏழை எளியோர் குரலற்றவர்களின் வாழ்க்கையை வஞ்சிக்கும் உலகத்தையும் அந்த எளியோர்கள் படும் துயரத்தையும் இந்த படம் எடுத்து காட்டுகின்றது. அன்பு மனங்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் ஒரு படைப்பு. நண்பர் சீனு ராமசாமி அவர்களின் மற்றுமொரு அருமையான படைப்பு.

அன்புடன்
துரை வைகோ
தலைமை கழக செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
21.10.2022