சமத்துவ பொங்கல் விழா கிண்டியில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கிளப்பில் நடைபெற்றது.

யாதவா மகா சபை தலைவர் டாக்டர் தி.தேவநாதன் யாதவ் தலைமையில் 
சமத்துவ பொங்கல் விழா கிண்டியில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கிளப்பில் நடைபெற்றது. 
மானாட்டம், மயிலாட்டம், புலியாட்டம், கரகாட்டம் போன்ற நாட்டுப்புற கலை நிகழ்ச்சியும், கலைமாமணி திருமதி.பாரதி திருமகன் குழுவினரின் வில்லிசையுடன் விழா நடைபெற்றது. 
இவ்விழாவில் பாஜக இராம ஶ்ரீனிவாசன், கொங்கு ஈஸ்வரன், திருமதி தேவனாதன், சட்டமன்ற உறுப்பினர் திருமதி வானதி ஶ்ரீனிவாசன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர், நடிகர் எஸ்வி சேகர், திருமதி பாத்திமா அலி, திரு. அர்ஜுன் சம்பத், திரு. மீனாஷி சுந்தரம் பிள்ளை, அருட் தந்தை ஜேம்ஸ் திரு குணசீலன் கலந்து கொண்டனர். திருமதி, திரு தேவனாதன் தம்பதியர் அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்கினார்கள். 
 கலந்து கொள்கின்றனர்…
இரவு 7.30 மணிக்கு, பொங்கல் விருந்துடன் விழா நிறைவு பெற்றது.
T RAGHAVAN

Share this:

Exit mobile version