Puthiyathalaimurai Tv program Thee-20

அனல் பறக்கும் “தீ-20”

20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் குறித்த சுவாரஸ்யமான தகவல்களைத் தாங்கி, புதியதலைமுறை தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது தீ-20”

பரபரப்புக்குப் பஞ்சமில்லாத 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் விறுவிறுப்பை, அனல் பறக்க அப்படியே நேயர்களுக்குக் கடத்தும் நிகழ்ச்சி என்பதாலேயே ‘தீ 20’ எனப் பெயர் சூட்டியிருப்பார்கள் போலும்.

ஆஸ்திரேலியாவில் தகுதிச் சுற்று போட்டி தொடங்கிய நாள் முதல், தனது நேயர்களுக்குத் தொடர்ந்து கிரிக்கெட் விருந்து படைத்து வருகிறது இந்த நிகழ்ச்சி. தினசரி நடந்து முடிந்த போட்டிகளின் விறுவிறு துணுக்குகளையும், அடுத்த நாள் நடக்க இருக்கும் போட்டிகளின் அலசலையும் அள்ளித் தருகிறது. முத்தாய்ப்பாக, கிரிக்கெட் விளையாட்டில் நிபுணத்துவம் பெற்றவரோடு, நெறியாளர் நடத்தும் நேர்காணல் மூலம், நேயர்களுக்குத் தேவையான தகவல்களை நயம்பட விளக்குகிறது.

அதோடு, முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்களின் பேட்டிகள், ரசிகர்களின் கருத்துகள் போன்றவை இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்ப்பவை. போட்டிகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியாகி இளைய தலைமுறை ரசிகர்களை அதிகம் கவர்ந்த மீம்ஸ்கள், இந்த நிகழ்ச்சியில் தனிப் பகுதியாக ஒளிபரப்பாகிறது.

மோதும் அணிகளில் எவை வெல்லும் என்ற எதிர்ப்பார்ப்பை நகைச்சுவையாக வெளிப்படுத்தும் வகையில், ‘எலியா கிளியா’ பகுதி அமைந்திருக்கிறது. எலி சொல்லும் அணி வெல்லுமா, கிளி சொல்லும் அணி வெல்லுமா என்ற என்ற சுவாரஸ்யம் நேயர்களையும் தொற்றிக்கொள்கிறது.

Share this:

Exit mobile version