Kalaignar TV series Ponni C/O Rani

பவித்ராவின் நகையால் வெடிக்கும் பூகம்பம்..!

கலைஞர் தொலைக்காட்சியில் இரவு 8:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மெகாத் தொடர் “பொன்னி C/O ராணி”.

பொன்னியாக ப்ரீத்தி சஞ்ஜீவும், ராணியாக ராதிகா சரத்குமாரும் நடிக்கும் இந்த தொடரில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த சூர்யா – பவித்ரா கல்யாணம் ஒருவழியாக நடந்து முடிய, பவித்ரா மேல் கோபத்தில் இருக்கும் சூர்யா, பவித்ராவை பழிவாங்க பவித்ராவின் நகைகளை திருடி அதற்கு பதில் கவரிங் நகைகளை மாற்றி வைக்கிறார்.

மறுபுறம், எதிர்பாராமல் நடந்த கல்யாணத்தால் சந்துரு, சுவேதா இடையே புரிதல் இல்லாமல் இருக்க, சுவேதா பிறந்தநாளுக்கு சந்துருவிடம் தனது நகையை பரிசாக கொடுக்கும்படி பவித்ரா கூற, அதனை சுவேதாவுக்கு பரிசாக கொடுக்கிறார் சந்துரு.

பின்பு அது கவரிங் என தெரிய வர வீட்டில் பூகம்பம் வெடிக்கிறது. இந்த பிரச்சனையில் இருந்து பவித்ரா எப்படி மீள்கிறார். சூர்யாவின் திருட்டு வெளிவருமா என்கிற எதிர்பார்ப்போடு தொடர் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.

“பொன்னி C/O ராணி” நெடுந்தொடரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:00 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் காணலாம்.

Share this:

Exit mobile version