கலைஞர் டிவியில் ஞாயிறுதோறும் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும்  தமிழோடு விளையாடு 

நமது கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் மாலை 6:00 மணிக்கு “தமிழோடு விளையாடு” என்கிற விறுவிறுப்பான தமிழ் சொல் விளையாட்டு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சி மாணவர்களின் தமிழ் அறிவை சோதிக்காமல், தமிழ் அறிவை ஊட்டும் நிகழ்ச்சியாக உருவாகியிருக்கிறது. தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் பள்ளி மாணவர்களுக்காக உருவாகியிருக்கும் ஓர் பிரம்மாண்ட மேடை.

பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த குழந்தைகள் பங்கேற்று அசத்தவிருக்கின்றனர். முழுக்க முழுக்க தமிழில், தமிழை மட்டுமே பயன்படுத்தி உருவாக்கப்படும் இந்த நிகழ்ச்சியில் விறுவிறுப்பான வித்தியாசமான சுற்றுகள், அறிவை வளர்க்கும் கேள்விகள் என உணர்ச்சிப்பூர்வமாக உருவாகியிருக்கிறது.

Share this:

Exit mobile version