Kalaignar tv new program Pesu Tamizh Pesu Press Release and images -Tamil

கலைஞர்தொலைக்காட்சியின் புத்தம் புதிய நிகழ்ச்சி திண்டுக்கல்  .லியோனியின் ‘பேசு தமிழ் பேசு’

கலைஞர் தொலைக்காட்சியில் அடுத்ததாக பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாக இருக்கிறது.

பொதுவாக, பூமலர்ந்துகெட்டது, வாய்விரிந்துகெட்டதுன்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க. பேசுனாதான் பிரச்சனை வரும்னு ஒருதரப்பு சொல்லுது. ஆனால், பேசாமல் உள்ளுக்குள்ளேயே புழுங்கிக்கிட்டு, ஒருநாள் திடீரென வெடிப்பதைவிட, நிகழ்வுகளை பேசி தீர்ப்பது சாலச்சிறந்தது என்று அறிஞர் பெருமக்கள் கூறுவர்.அதையே பேச்சு வெள்ளியா இருந்தா, அமைதி தங்கமா இருக்கும்னு சொல்லுவாங்க.

எதைவேண்டுமானாலும் பேசி தீர்க்கலாம். அப்படிப்பட்ட பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக கலைஞர் தொலைக்காட்சியில் திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில், ‘பேசுதமிழ்பேசு’ என்னும்பிரம்மாண்ட நிகழ்ச்சி வருகிறசெப்டம்பர் 19-ந் தேதிமுதல் ஞாயிறுதோறும் காலை 10 :00 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.பேச்சு நம் உரிமை. இனி..இன்பத்தமிழ் பரவிட பேசுவோம்..!!ஒவ்வொரு ஞாயிறு காலையும் தமிழ் உங்கள் இல்லங்களில் ஒலிக்கட்டும்!!

Share this:

Exit mobile version