Kalaignar TV Kannethirey Thondrinaal

ஆதிராவாக அதிரடி காட்ட வந்திருக்கும் “அண்ணியார்”ரேகா..!

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மெகாத்தொடர் “கண்ணெதிரே தோன்றினாள்”.

சக்தியாக சுவேதாவும், ருத்ராவாக மாளவிகா அவினாஷூம் நடிக்கும் இந்த தொடருக்கு குடும்பங்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், தொடரில் அபிராமி பாட்டியின் சொல்லுக்கு ஆட்டுவிக்கப்படும் அனிதா, சக்தியை வீட்டை விட்டு விரட்ட நாடகம் போட அதை சக்தி சாமர்த்தியமாக எதிர்கொள்ள தொடர் விறுவிறுப்பாக செல்கிறது.

இதற்கிடையே சுவாரஸ்யத்தை மேலும் கூட்டும் விதமாக, கதையின் போக்கை மாற்றும் ஓர் முக்கிய கதாபாத்திரத்தில் ஆதிராவாக அதிரடி காட்ட வந்திருக்கிறார் ரேகா கிருஷ்ணப்பா. இவர் “தெய்வமகள்” நெடுந்தொடரில் அண்ணியார் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது பூர்வீக சொத்தை ருத்ராவுக்கு விட்டுக்கொடுத்து, ருத்ராவுடன் சம்பந்தம் வைத்துக் கொள்ள ஆதிரா நினைக்க, ருத்ராவும் அதற்கு சம்மதம் தெரிவிக்கிறார். ஆனால் இந்த திருமணத்தில் விருப்பமில்லாத திவ்யா, இந்த திருமணத்தை நிறுத்த நினைக்க, இதில் சக்தி சிக்கிக் கொள்ள தொடர் விறுவிறுப்பாக நகர்கிறது. அதிராவின் வருகை, ருத்ராவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

Share this:

Exit mobile version