Jaya tv new program ‘Kadha Kelu Kadha Kelu’

“கதை கேளு கதை கேளு “

இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக இசைஞானி இளையராஜா அவர்கள் கலந்து கொண்டு தனது இசை அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி தான் “கதை கேளு கதை கேளு”.

ஜெயா தொலைக்காட்சியில் வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9:00 மணிக்கு இசைஞானி இளையராஜா அவர்கள் பங்கு கொள்ளும் ‘கதை கேளு கதை கேளு’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

இந்த நிகழ்ச்சியின் மூலம் இசைஞானி அவர்கள் தனது ஆரம்ப கால நினைவுகளையும் பாடல் உருவான அனுபவங்களையும் கூறி இப்பாடலை இசைக்கலைஞர்களோடு இசையமைத்து பாடுகிறார். இதனை தொடர்ந்து திரையுலக கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இசைஞானியிடம் கேட்கும் கேள்விகளுக்கு நகைச்சுவையோடு உரையாடி பதிலளிக்கிறார் இசைஞானி. இந்நிகழ்ச்சியை ரங்கராஜ் பாண்டே தொகுத்து வழங்குகிறார் .இந்நிகழ்ச்சியின் மறுஒளிபரப்பு வரும் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5:30 மணிக்கும் இரவு10:00 மணிக்கும் ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்.

Share this:

Exit mobile version