ரூ 12.21 லட்சம் மதிப்பிலான தங்கம் சென்னை விமான நிலைய சுங்கத்துறையால் பறிமுதல்

விமானம் மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், ஏர் இந்தியா விமானம் ஏஐ 906 மூலம் துபாயில் இருந்து சென்னை வந்திறங்கிய திருச்சியை சேர்ந்த மதிவல்லபன் கருணாமூர்த்தி,  23, என்பவரை விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் வழியில் சுங்க அதிகாரிகள் இடைமறித்தனர்.

அவரது பையை சோதனை செய்து பார்த்த போது, அதற்குள் இருந்த கார்டுலெஸ்  வாக்குவம் கிளீனர் ஒன்று வழக்கத்தை விட எடை கூடுதலாக இருந்தது கண்டறியப்பட்டது.

அதை திறந்து பார்த்த போது, உருளை வடிவிலான தங்க துண்டு ஒன்று டேப் மூலம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, சுங்க சட்டம், 1962- ன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. 24 கேரட் தரத்திலான அந்த துண்டின் எடை 251 கிராம்கள் ஆகும், விலை ரூ 12.21 லட்சம் ஆகும்.

இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது என்று செய்திக் குறிப்பு  ஒன்றில் சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.

(வெளியீட்டு அடையாள எண்: 1717110)

Share this:

Exit mobile version