வசதிக் குறைவானவர்களுக்கு மருத்துவ வசதியை வழங்க வோக்ஹார்ட் ஃபவுண்டேஷனுடன் இணைந்து செயல்படும் ஹெச்டிஎல் லிமிடெட்

சென்னையில் இந்த மருத்துவ வசதி செயல்திட்டம், ஆண்டுக்கு சுமார் 25,000 நபர்களுக்கு பயன்தரும்.

சென்னையிலும் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தேவையிலுள்ள மற்றும் வசதி குறைவான நபர்களுக்கு உடல்நல சிகிச்சையை வழங்குவதற்கான ஒரு பெருநிறுவன சமூகப் பொறுப்புறுதி திட்டத்தை வோக்ஹார்ட் ஃபவுண்டேஷனுடன் இணைந்து, சமீபத்தில் தொடங்கியிருக்கிறது.  ஆப்டிகல் ஃபைபர் கேபிள் தயாரிப்பாளர், ஃபைபர் ஆப்டிக் தொடர்பான விரிவான தீர்வுகளை வழங்குனர் மற்றும் ஏரோஸ்பேஸ் & பாதுகாப்பு, ஆட்டோமோட்டிவ்  & தொழில்துறை பிரிவுகளுக்கான வயரிங் ஹார்னெஸ் தயாரிப்பாளர் என புகழ்பெற்றிருக்கும் ஹெச்சிஎல் லிமிடெட், சென்னையில் கிண்டி தொழிற்பேட்டை மற்றும் ஓசூரில் சிப்காட் ஆகிய இடங்களில் உற்பத்தி தொழிலகங்களைக் கொண்டு இயங்கி வருகிறது. 

2021-2022 நிதியாண்டிலிருந்து செயல்படத் தொடங்கும் இத்திட்டம், 3 ஆண்டுகள் காலஅளவிற்கு மொத்தத்தில் 1.05 கோடி ரூபாய் செலவீன மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகிறது.  ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 25,000 நபர்களுக்கு இச்செயல்திட்டம் பயனளிக்கும்.  நோயறிதல் மற்றும் பரிசோதனையகத்திற்குத் தேவைப்படும்  சாதனங்கள், வேதிப்பொருட்கள் மற்றும் மருந்துகளோடு நடமாடும் மருத்துவ வாகனமும் இச்செயல்திட்டத்தின் கீழ் இடம்பெறுகின்றன.  சென்னையிலும் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்து, ஒரு வாரத்தில் எஞ்சியுள்ள 6 நாட்களிலும், தினசரி அடிப்படையில் காலை 9.00 மணியிலிருந்து, மாலை 4.00 மணி வரை செயல்படும் இந்த நடமாடும் மருத்துவ வாகனத்தில் ஒரு மருத்துவர், மருந்தாளுனர் மற்றும் பரிசோதனையக தொழில்நுட்ப பணியாளர் ஆகியோர் பணியாற்றுவார்கள். 

ஓசூர் நகரத்திலும் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மருத்துவ சிகிச்சைத் தேவைப்படும் மக்களுக்கு அடிப்படை சுகாதார சேவைகளை வழங்குவதற்காக வோக்ஹார்ட் ஃபவுண்டேஷனுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் இந்த பெருநிறுவன சமூக பொறுப்புறுதி செயல்திட்டத்தை நீட்டிக்கவும் ஹெச்சிஎல் திட்டமிட்டிருக்கிறது.  இதுவரை பல்வேறு சிஎஸ்ஆர் செயல்திட்டங்களில் ரூ.25 கோடி தொகையை ஹெச்எஃப்சிஎல் குழுமம் செலவிட்டிருக்கிறது.  மேலும், சிஎஸ்ஆர் செயல்பாடுகளுக்காக அடுத்த நிதியாண்டான 2023 – ல் சமார் 7-8 கோடியைப் பயன்படுத்தவும் இது  திட்டங்கள் வகுத்திருக்கிறது. 

ஹெச்சிஎல் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும் மற்றும் ஹெச்எஃப்சிஎல் லிமிடெட்ன் நிர்வாக இயக்குனர் திரு. மகேந்திர நஹாட்டா, சிஎஸ்ஆர் செயல்திட்டம் பற்றி பேசுகையில் கூறியதாவது: “நாம் வாழும் சமூகத்தை இன்னும் ஒரு சிறந்த அமைவிடமாக ஆக்குவதற்கு தன்னாலான பங்கினை ஆற்றுவதற்கு ஹெச்எஃப்சிஎல் குழுமம் பொறுப்புறுதி கொண்டிருக்கிறது.  சவால்கள் நிறைந்த இக்காலகட்டத்தில், சட்டப்படியான ஒரு கடமை என்பதற்கும் மேலாக, அவசியமான மற்றும் சிறப்பான ஒரு செயல்பாடாகவே சிஎஸ்ஆர் இருக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம்.  எமது சிஎஸ்ஆர் செயல்பாடுகளின் வழியாக குறிப்பாக, மருத்துவம் மற்றும் கல்விப் பிரிவுகளில் 5 இலட்சத்திற்கும் அதிகமான நபர்கள் மீது ஆக்கப்பூர்வ தாக்கத்தை ஹெச்எஃப்சிஎல் ஏற்படுத்தியிருக்கிறது.  வோக்ஹார்ட் ஃபவுண்டேஷனுடனான எமது ஒருங்கிணைவின் வழியாக எமது துணை நிறுவனத்தின் வழியாக இச்செயல்பாடுகளை இன்னும் விரிவாக்கவும் மற்றும் சமுதாயத்தின் மீதான தாக்கத்தை இன்னும் பெரிதாக்கவும் நாங்கள் விழைகிறோம்.  அடிப்படை சுகாதார சிகிச்சைகளுக்கு அணுகுவசதி இல்லாத அல்லது குறைவான வசதியையே கொண்டிருக்கின்ற ஏழை, எளியவர்களை இச்சேவை சென்றடையுமாறு செய்வதே இச்செயல்முயற்சியின் நோக்கமாகும்.  நாட்டிற்கு சேவையாற்றுவதற்கான எமது பொறுப்புறுதியில் சிறிதும் தளராமல், உறுதியோடு நிலைத்திருப்பதும் எமது குறிக்கோளாகும்.”

வோக்ஹார்ட் ஃபவுண்டேஷனின் மருத்துவ இயக்குனர் டாக்டர். ஆர். ஸ்ரீராம் இதுகுறித்து கூறியதாவது: “வோக்ஹார்ட் ஃபவுண்டேஷனுக்கு சிறப்பான ஆதரவை வழங்கி வரும் ஹெச்எஃப்சிஎல் குழுமத்தின் உதவிக்கும் மற்றும் ஆதரவிற்கும் நாங்கள் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.  மக்களுக்கு உடல்நலப் பராமரிப்பு வசதிகள் கிடைப்பதில் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது.  சென்னையிலும் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் வசதியற்ற, ஏழை எளிய சமூகங்களுக்கு சிறந்த அடிப்படை சுகாதார வசதியை வழங்குவதற்கு இச்செயல்திட்டத்தின் வழியாக வோக்ஹார்ட் ஃபவுண்டேஷனும், ஹெச்எஃப்சிஎல்லும் ஒருங்கிணைந்து செயல்படும்.”

இச்செயல்திட்டத்திற்கான தொடக்க நிகழ்வு, கிண்டி தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ஹெச்டிஎல் லிமிடெட் – ன் வளாகத்தில்  நடைபெற்றது.   ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் – ன் பிரசிடெண்ட் திரு. எம். பாலச்சந்திரன் ஐபிஎஸ், A.D.G.P. (பணிஓய்வு) , இத்திட்டத்தின் ஒரு அங்கமான  நடமாடும் மருத்துவ வாகனத்தின் சேவையை  கொடியசைத்து  தொடங்கி வைத்தார்.  ஹெச்எஃப்சிஎல் – ன் நிர்வாக இயக்குனரும், ஹெச்சிஎல் லிமிடெட் – ன் தலைவருமான திரு. மகேந்திர நகாட்டா, புதுடெல்லியிலிருந்து இந்நிகழ்வில் மெய்நிகர் முறையில் பங்கேற்றார்.   ஹெச்சிஎல் லிமிடெட் – ன் தலைமை இயக்க அதிகாரி திரு. ஜி.எஸ். நாயுடு, ஹெச்சிஎல் லிமிடெட் -ன்   நிர்வாக உயரதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். 

நிழற்பட வாசகம்:

சென்னை, கிண்டியில் உள்ள ஹெச்டிஎல் வளாகத்தில் ஹெச்டிஎல் லிமிடெட் – ன் சிஎஸ்ஆர் செயல்திட்டத்தின் ஒரு அங்கமாக வோக்ஹார்ட் ஃபவுண்டேஷன் ஒத்துழைப்போடு மேற்கோள்ளப்படும் நடமாடும் மருத்துவ சேவை வாகனத்தை  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் – ன் பிரசிடெண்ட் திரு. எம். பாலச்சந்திரன் ஐபிஎஸ், A.D.G.P. (பணிஓய்வு), மார்ச் 16 அன்று கொடியசைத்து  தொடங்கி வைத்தார்.  புதுடெல்லியிலிருந்து இந்நிகழ்வில் மெய்நிகர் முறையில் ஹெச்எஃப்சிஎல் – ன் நிர்வாக இயக்குனரும், ஹெச்டிஎல் லிமிடெட் – ன் தலைவருமான திரு. மகேந்திர நகாட்டா, மற்றும் அதன் தலைமை இயக்க அதிகாரி திரு. ஜி.எஸ். நாயுடு மற்றும் அதன் உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Share this:

Exit mobile version